தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்லிமலையில் கோயிலுக்கு வந்த டிரைவர் திடீர் சாவு

சேந்தமங்கலம், செப்.22: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(58). கார் டிரைவரான இவரது மனைவி சபினு. இவர்களுக்கு ராகினி, உஷா நந்தினி என்ற மகள்களும், கவிச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். கண்ணன் நேற்று தனது நண்பர்கள் பாலு, அஜய் ஆகியோருடன் அமாவாசையையொட்டி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மாசி பெரியசாமி கோயிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.

Advertisement

அடிவாரம் நத்துக்குளி பட்டியிலிருந்து மலை மீது நண்பர்களுடன் ஏறிச்சென்று கோயிலில் வளாகத்தில் அமர்ந்துள்ளனர். அப்போது, கண்ணன் திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், திடுக்கிட்ட நண்பர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீரை வாங்கி குடித்த சிறிது நேரத்தில் கண்ணன் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை மீட்டு செம்மேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கண்ணனை டோலி கட்டி மீட்டு செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லிமலை கோயிலுக்கு வந்த டிரைவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement