தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாக்கடை அடைப்பால் தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்செங்கோடு, நவ.21: திருச்செங்கோடு அருகே, சாக்கடை தூர்வாராததால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், 87.கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில், விசைத்தறிகள் அதிகமுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேருந்து நிறுத்தத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய், தூர்வாராமல் கழிவுநீர் குட்டை போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வழிந்து பொதுமக்கள் செல்லும் சாலை முழுவதும் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement