தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளி முன்பு மண் கொட்டி வழித்தடம் அடைப்பு

நாமக்கல், அக்.14: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள ஆண்டாபுரத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி அருகில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலம் இருக்கிறது. அதன் வழியாக மாணவ, மாணவிகள், விவசாயிகள் சென்று வரும் வகையில், வழித்தடம் இருந்தது. இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை மூலம், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர், அந்த வழித்தடத்தில் மண்ணை கொட்டி அடைத்துவிட்டார்.

Advertisement

இதன் காரணமாக, அவ்வழியாக பள்ளிகளுக்கும், விவசாய தோட்டங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், நேற்று மாலை பள்ளியின் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வளையப்பட்டி - காட்டுப்புத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மோகனூர் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, வழித்தடத்தை மறித்து கொட்டப்பட்ட மண், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement