தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

மல்லசமுத்திரம், ஆக.13: தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மல்லசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மல்லசமுத்திரம் பிடிஓ அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமாபுரம் கிராமம், கொசவம்பாளையம் மற்றும் பூசாரிக்காடு பகுதிகளில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும். சுழற்சி முறையில் வேலை வழங்காமல் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மத்திய அரசு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு அறிவித்த ரூ.336 சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராமன், அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேலு ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் வரதராஜ், சிவக்குமார், தங்கம்மாள், தமிழ்ச்செல்வி, நளினி, ஜீவிதா உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, பி.டி.ஓ., பாலவிநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement

Advertisement