தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி

ராசிபுரம், டிச. 12: ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில், தனியார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவிகள் 10 பேர், தங்களது கிராமப்புற மற்றும் விவசாய பணி அனுபவ பயிற்சியைத் தொடங்கினர். நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் தனலட்சுமி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியின் போது கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். குறிப்பாக ‘நீல ஒட்டும் பொறி, மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் டெல்டா பொறிகளை ஏக்கர் 1க்கு எண்கள், 5 என்ற விகிதத்தில் வயல்களில் வைப்பதன் மூலம், பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்’ என நேரில் அமைத்து காண்பித்தனர். மேலும் ‘வயல்களின் ஓரங்களில் வரப்பு பயிராக தட்டைப்பயறு, ஆமணக்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை நடவு செய்வதால், பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறைவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்து, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யலாம்’ என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.

Advertisement

Advertisement