தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்

ராசிபுரம், ஆக.12: ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன் நீர் நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. சாதாரணமாக யூரியாவை மண்ணில் அடியுரமாகவோ அல்லது மேலுரமாகவோ இடும்போது, 35% சத்துக்கள் மட்டுமே பயிருக்கு கிடைக்கும். மீதமுள்ள 65% சதவீத சத்துக்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடுவதுடன் ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்கவும், பயிருக்கு அதிகளவில் தழைச்சத்து கிடைக்கவும், தற்சமயம் யூரியாவானது திரவ வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நானோ யூரியாவை 30 லிட்டர் தண்ணீருக்கு 500 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதால் 80 - 90 % பயிருக்கே கிடைக்கிறது. இந்த தழைச் சத்துக்கள் ஒரு மணி நேரத்தில் இலைகளுக்கு சென்று விடும். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தில், சிறுதானிய பயிர்களுக்கு இருமுறை நானோ யூரியாவே தெளிக்க 50 சதவீத மானியத்தில் 2 லிட்டர் நானோ யூரியா மற்றும் தெளிப்பு கூலி உட்பட ஒரு ஹெக்டருக்கு ரூ.1700 மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் ராசிபுரம் வேளாண் விரிவாக்கம் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.