தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

படிப்பை பாதியில் நிறுத்தி பிளஸ் 1 மாணவிக்கு திருமணம்

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி அருகே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் கணவர், பெற்றோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கோமளா, பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கொப்பக்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அவரது படிப்பை பாதியிலேயே அவரது பெற்றோர் நிறுத்தினர். அதன் பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி-மாதம்மாள் ஆகியோரின் மகன் வெங்கடேசன்(24) என்பவருக்கும், அந்த சிறுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 27ம்தேதி, பாலேகுழி பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் அவர்களது திருமணம் நடந்தது. இது குழந்தை திருமணம் என்பதால் இதுபற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில், சிறுமியை திருமணம் செய்த வெங்கடேசன், அவரது பெற்றோர் ராமசாமி, மாதம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை பச்சையப்பன், தாய் சாவித்ரி ஆகிய 5 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement