உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
Advertisement
சேந்தமங்கலம், அக்.9: எருமப்பட்டி அடுத்த அ.வாழவந்தி ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் அ.வாழவந்தி ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடந்தது. முகாமில் எம்.மேட்டுப்பட்டி, செவ்வந்திப்பட்டி, அ.வாழவந்தி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பில் பெயர் மாற்றம், நிலம் அளவீடு செய்தல், புதிய குடிநீர் இணைப்பு, மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். உடனடியாக மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
Advertisement