தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தாயின் தகாத உறவால் மகள் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிபாளையம், ஆக.8: பள்ளிபாளையம் அருகே தாயின் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னையில், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கட்டநாச்சம்பட்டி யாதவர் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கணவர் பாஸ்கரை பிரிந்து, 2 பெண் குழந்தைகளுடன் பள்ளிபாளையம் வந்தார். இங்கு அலமேடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது மூத்த மகள் துர்கா நந்தினி (16), அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இளைய மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, சங்கீதாவுக்கும் திருச்செங்கோட்டை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி குமரவேலுக்கும், கடந்த சில வருடமாக பழக்கம் ஏற்பட்டது. தற்போது குமரவேல் அலமேட்டில் சங்கீதாவுடன் தங்கியுள்ளார். குமரவேலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இதனால் குமரவேல் இரண்டு வீடுகளிலும் மாறி மாறி வசித்து வந்துள்ளார்.

நேற்று காலை, குமரவேலுவின் முதல் மனைவி கவிதா, கணவனை தேடி அலமேட்டில் உள்ள சங்கீதா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கவிதாவுக்கும், சங்கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் அவமானமடைந்த துர்கா நந்தினி தனது தாயாரை கண்டித்து, வாக்குவாதத்தை கைவிடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் வாய்ச்சண்டை தொடரவே, மனமுடைந்த துர்கா நந்தினி, வீட்டில் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டார். வாய்த்தகராறு ஓய்ந்த பின்னர், சங்கீதா தனது மகள் இருந்த அறையை தட்டியும் கதவு திறக்கவில்லை.

இதனால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, மின்விசிறியில் துர்கா நந்தினி தூக்கு மாட்டி சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் மாணவி துர்கா நந்தினி நடனமாடும் நிகழ்ச்சி இருந்தது. ஆனால், குடும்ப பிரச்னையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News