தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலர் திருட முயன்ற வாலிபர் கைது

ராசிபுரம், டிச.7: நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில் காவலாளியின் டூவீலரை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் நாகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சின்னுசாமி(45). இவர், மெட்டாலா ஆஞ்சநேயர் கோயிலில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக வீட்டில் இருந்து டூவீலரில் பணிக்கு வந்து விட்டு, மறுநாள் வீடு திரும்புவார். நேற்று முன்தினம் மாலை வேலைக்கு வந்த சின்னுசாமி டூவீலரை அன்னதாக கூடத்திற்கு முன் நிறுத்திவிட்டு கோயிலில் உட்கார்ந்திருந்தார். அவருடன் பூசாரி விஜயகாந்த்தும் இருந்துள்ளார்.

Advertisement

நேற்று அதிகாலை 3 மணியளவில் வண்டியை தள்ளி செல்லும் சத்தம் கேட்டு சின்னுசாமி திடுக்கிட்ட விழித்தார். அப்போது, வாலிபர் ஒருவர் டூவீலரின் சைடு லாக்கை உடைத்து தள்ளிச்செல்ல முயன்றதை கண்டு திடுக்கிட்டார். உடனே, அவரை மடக்கி பிடித்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த பூசாரி விஜயகாந்த் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அவர் தம்மப்பட்டி ஒட்டர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தினேஷ்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.

Advertisement