தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லாங்குழி சாலையை சீரமைக்க நடவடிக்கை

நாமகிரிப்பேட்டை, செப்.2: வெண்ணந்தூர் அருகே வடுகம்பாளையம் பகுதியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம், மின்னக்கல் பஞ்சாயத்து வடுகம்பாளையம் 6வது வார்டு, கீழ் தெருவில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை காலங்களில் சிறிது நேரம் மழை பெய்தால் கூட, தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால், பள்ளி வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் அவதிக்குள்ளாகி வருகிறோம். சாலையை சீரமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஓராண்டுக்கு முன்பு பள்ளமான இடங்களில் மண் கொட்டி சரி செய்தனர். ஆனால், மழை பெய்யும் சமயங்களில் மண் கரைந்து சகதி காடாக மாறி விடுகிறது. சாலை முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் அரை அடி ஆழத்திற்கு பள்ளம் காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சகதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News