தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெருநாய்கள் பிடிக்கும் பணி மீண்டும் துவக்கம்

பள்ளிபாளையம், அக்.26: பள்ளிபாளையம் நகராட்சியில் எஞ்சியள்ள தெருநாய்களை பிடிக்கும் பணிகள் மீண்டும் துவங்கியது. 10 நாட்களில் 406 நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெளியில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில், தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துள்ளதாகவும், வீதிகளில் படுத்திருக்கும் நாய்கள் கூட்டமாக சென்று பொதுமக்கள், கால்நடைகளை கடித்து ஆபத்தை ஏற்படுத்துவதாக, நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் தொடர்ந்து புகார்கள் செய்தனர்.

Advertisement

இதையடுத்து நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் நகராட்சி பகுதியில் 1,303 தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்தது. இந்த நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. கடந்த ஓராண்டில் மூன்று முறை, தெருநாய்களை பிடிக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் 897 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநாய் தடுப்பூசியும் போடப்பட்டு, நாய்களை பிடித்த இடங்களிலேயே மீண்டும் விடப்பட்டது. இதனால் நாய்களின் இனப் பெருக்கம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் மீதமுள்ள 406 நாய்களையும் முழுமையாக பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்திட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நாய் பிடி குழுவினர் பள்ளிபாளையத்தில் முகாமிட்டு, நேற்று நாய்களை பிடிக்கும் வேலையில் இறங்கினர். வரும் 10 நாட்களில் மீதமுள்ள 406 நாய்களையும் பிடிக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

Advertisement

Related News