தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்கள் வருகையின்றி வெறிச்சோடிய அரசு பள்ளி

பள்ளிபாளையம், நவ.11: பள்ளிபாளையம், வெப்படை, வெடியரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட நூற்புஆலைகளும், ஆட்டோ லூம் நெசவாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு வெடியரசம்பாளையம் அரசு பள்ளியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பிறமொழி குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் வகையில், தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையுடன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளனர். தமிழ் தெரியாத 30 வடமாநில குழந்தைகளுக்கு, தனி வகுப்பு ஒதுக்கப்பட்டு, தமிழ் எழுத்துக்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தி மட்டுமே தெரிந்த இந்த குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை ஆர்வமுடன் படித்து எழுதி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது பீகாரில் தேர்தல் நடைபெறுவதால், வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் ஓட்டு போடுவதற்காக குடும்பத்தோடு புறப் பட்டு சென்றுள்ளனர். இதனால் 30 குழந்தைகளில் 20 பேர் பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். உ.பி, ஒரிசா, ஜார்கண்ட் போன்ற தேர்தல் இல்லாத மாநிலங்களை சேர்ந்த சொற்பமான குழந்தைகளே வகுப்பில் உள்ளதால், வகுப்பறை வெறிச்சோடியுள்ளது. சொந்த மாநிலம் சென்ற குழந்தைகளின் வரவுக்காக ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement