தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் நெல் வயலில் தேங்கிய நீர்

 

Advertisement

சேந்தமங்கலம், டிச.1: எருமப்பட்டி வட்டார பகுதியில் தொடர் மழையின் காரணமாக வயலில் தேங்கியுள்ள மழை நீரால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எருமப்பட்டி வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பவித்திரம், பவித்திரம்புதூர், நவலடிபட்டி, முட்டாஞ்செட்டி, வரகூர், பொட்டிரெட்டிபட்டி, கோம்பை, முத்துகாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் ஐப்பசி மாத பட்டத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்தது. தற்போது புயலின் காரணமாக கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மழைநீர் முழுவதும் நெல் வயலில் தேங்கியுள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எருமப்பட்டி கொல்லிமலை அடிவார பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ளோம். ஐப்பசி மாத பட்டமாக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது புயலின் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால், மழைநீர் முழுவதும் வயலில் தேங்கியுள்ளது. வரப்பை வெட்டி தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். வெளியேற்றப்படும் தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள சோளத்தீவன வயலுக்கு செல்வதால் சோள பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நெல் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

 

Advertisement

Related News