குண்டுமல்லி விலை சரிவு
பரமத்திவேலூர், டிச.1: பரமத்திவேலூர் மலர் சந்தையில் நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையான குண்டு மல்லி நேற்று விலை சரிந்து ரூ.2,600க்கு ஏலம் போனது.
பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆனங்கூர், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகர், கோப்பணம்பாளையம், கபிலர்மலை, குஞ்சாம்பாளையம், நடந்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி, செங்கப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூ சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
திருமண சீசன் என்பதால் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ரூ.4,000க்கும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும், அரளி கிலோ ரூ.200க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.140க்கும், பச்சை முல்லைப்பூ கிலோ ரூ.1,600க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ.1,000க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.140க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், கலர் ரோஸ் கிலோ ரூ.240க்கும், ஜாதி மல்லி பூ கிலோ ரூ.700க்கும், காக்கட்டான் கிலோ ரூ.700க்கும் ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,600க்கும், சம்பங்கி கிலோ ரூ.100க்கும், அரளி கிலோ ரூ.260க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.200க்கும், பச்சை முல்லைப் பூ கிலோ ரூ.1,600க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ.1,300க்கும், செவ்வந்திப்பூ ரூ.180க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும், கலர் ரோஸ் கிலோ ரூ.340க்கும், ஜாதி மல்லி பூ கிலோ ரூ.1,200க்கும், காக்கட்டான் பூ கிலோ ரூ.1,200க்கும் ஏலம் போனது. ஒரே நாளில் பூக்களின் விலை சரிந்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.