தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குண்டுமல்லி விலை சரிவு

 

Advertisement

பரமத்திவேலூர், டிச.1: பரமத்திவேலூர் மலர் சந்தையில் நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையான குண்டு மல்லி நேற்று விலை சரிந்து ரூ.2,600க்கு ஏலம் போனது.

பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆனங்கூர், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகர், கோப்பணம்பாளையம், கபிலர்மலை, குஞ்சாம்பாளையம், நடந்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி, செங்கப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூ சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

திருமண சீசன் என்பதால் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ரூ.4,000க்கும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும், அரளி கிலோ ரூ.200க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.140க்கும், பச்சை முல்லைப்பூ கிலோ ரூ.1,600க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ.1,000க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.140க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், கலர் ரோஸ் கிலோ ரூ.240க்கும், ஜாதி மல்லி பூ கிலோ ரூ.700க்கும், காக்கட்டான் கிலோ ரூ.700க்கும் ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,600க்கும், சம்பங்கி கிலோ ரூ.100க்கும், அரளி கிலோ ரூ.260க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.200க்கும், பச்சை முல்லைப் பூ கிலோ ரூ.1,600க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ.1,300க்கும், செவ்வந்திப்பூ ரூ.180க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும், கலர் ரோஸ் கிலோ ரூ.340க்கும், ஜாதி மல்லி பூ கிலோ ரூ.1,200க்கும், காக்கட்டான் பூ கிலோ ரூ.1,200க்கும் ஏலம் போனது. ஒரே நாளில் பூக்களின் விலை சரிந்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

Related News