தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில துப்பாக்கி சுடும் போட்டி நாகர்கோவில் மாணவருக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கம்

நாகர்கோவில், ஜூலை 25: கோவையில் நடைபெறும் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நாகர்கோவில் பள்ளி மாணவர் 2 தங்க பதக்கம் உள்பட 4 பதக்கங்கள் வென்றுள்ளார். கோவை ஆயுதப்படை மற்றும் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் கோவை ரைபிள் அசோசியேஷன் சார்பில், 49வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21ம் தேதி வரை ரைபிள் போட்டிகள் நடைபெற்றன. 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிஸ்டல் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

இப்போட்டியில், கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,650 பேர் பங்கேற்றுள்ளனர். ரைபிள் பிரிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கங்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் நாகர்கோவில் ராஜாஸ் சர்வதேச பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சானியோ அக்ஷய் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் பங்கேற்று 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கங்களை கோவை விமானப்படை நிர்வாக கல்லூரி இயக்குநரும், ஏர் கமாண்டன்ட் விகாஸ் வாகி வழங்கினார். கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க செயலாளர் வேல்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement