தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகப்பட்டினம் தாமரைக்குளத்தில் 2,000 மரக்கன்று நடும் விழா தொடக்கம்

நாகப்பட்டினம், செப். 25: தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் வனத்துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று தொடங்கியது. முதல்வரின் உத்தரவின் படி கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டது. வரும் 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீத மரக்கன்றுகளை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

பசுமை தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணம் செய்ய தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கப்பட்டது.

நாகப்பட்டினம் தாமரைக்குளத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட வன பாதுகாவலர் பார்கவதேஜா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குணாநிதி வரவேற்றார்.

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து பசுமை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி வன பாதுகாப்பு அலுவலர் அருண்மொழிவர்மன், நாகப்பட்டினம் வன பாதுகாவலர் சியாம்சுந்தர், மாவட்ட பசுமை தோழர் சானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News