தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாக்டோ -ஜியோ அமைப்பு அடையாள வேலை நிறுத்தம்: வெறிச்சோடிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்

நாகப்பட்டினம், நவ. 19: ஜாக்டோ -ஜியோ சார்பில் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர், சரவணன், ராஜராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் வளர்மாலா,, மாவட்டத் தலைவர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத் தலைவர் ரமேஷ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரமேஷ், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் செங்குட்டுவன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் சித்திரா காந்தி, மருத்துவ ஆய்வுக்கூட நுட்பனர் சங்க மாநில துணைத் தலைத் தலைவர் ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.

Advertisement

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிதிக் காப்பாளர் காந்தி நன்றி கூறினார்.

 

Advertisement