தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல் தேதியே சம்பளம் வழங்க கோரி சிஐடியு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

நாகப்பட்டினம், செப். 18: மாதந்தோறும் முதல் தேதி சம்பளம் வழங்க கோரி நகராட்சி சிஐடியு தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் நகராட்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் நகர எல்லையில் தூய்மை பணி செய்வதற்காக தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 188 தூய்மை பணியாளர்கள், 35 ஓட்டுநர்கள் ஆகியோரை நியமனம் செய்துள்ளது.

Advertisement

இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதி ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கும். இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான ஊதியம் நேற்று(17ம் தேதி) வரை வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்த தூய்மை பணியாளர் நேற்று நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.

பிஎப் பிடித்தம் செய்யும் தொகையை முறையாக வரவு வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் லீனாசைமன் தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

Advertisement