தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்வேளூரில் எஸ்ஐஆர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

கீழ்வேளூர், நவ. 13: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் வருவாய்துறை சார்பில் சிறப்­புத் தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்)விழிப்புணர்வு இருச்சக்கர வாகன பேரணி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ள இந்த பணியால் அரசியல் கட்சி மற்றும் பொது மக்களிடையே குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனை நிவர்த்தி செய்யும் விதமாக வருவாய்துறை சார்பில் விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், வட்டாட்சியர் கவிதாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணியானது கீழ்வேளூர் கடைத்தெரு, கூத்தூர், குருக்கத்தி நீலப்பாடி, கானூர் வரை சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இதில் கீழ்வேளூர் தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்களர் பதிவு அலுவலர் ராஜேஷ்வரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் தேர்தல், வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement