தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனித்துவ அடையாள அட்டைபெற நவ.10க்குள் பதிவு செய்ய வேண்டும்

வேதாரண்யம், நவ.7: வேதாரண்யம் பகுதியில் தனித்துவமான அடையாள அட்டைக்கு இதுவரை பெயர் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற நவ.10ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியசீலன் கேட்டுக்கொண்டுள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின்னணு முறையில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான “அடையாள எண்” வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அடையாள அட்டை கேட்டு வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பதிவு செய்து வருகின்றனர். இதுவரை பதிவு செய்யாமல் மீதமுள்ள விவசாயிகள் மற்றும் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாற்றம் பெற்று அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள அட்டை பெற்றால் மட்டுமே அரசின் மூலம் வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்.

எனவே வேதாரண்யம் பகுதி விவசாயிகள் உடனடியாக தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி தனித்துவ அடையாள அட்டைக்கு நவம்பர் 10ந்தேதிக் குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Advertisement

Related News