திறந்த நிலையில் உள்ள இரண்டு கிணறுகளுக்கு மூடி அமைக்க கோரிக்கை
நாகப்பட்டினம், ஜூலை 28: திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீர் பயன்பாட்டிற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் மாரியம்மன் கோவில் மற்றும் ஆர்ச் அருகில் 2 கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணறுகளை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தாமல் உள்ளனர்.
கிணற்றின் அருகில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது.அந்த வழியே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆபத்தை உணராமல் அருகில் சென்று எட்டிப் பார்த்து விளையாடி வருகின்றனர். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் கிணறுகளுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.