தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது

 

செம்பனார்கோயில், ஜூலை 30: செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் போலீஸ் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்.இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், தனிப்பிரிவு போலீஸ் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது செம்பனார்கோயில் பகுதியில் மயிலாடுதுறை கூறைநாடு அண்ணா வீதியை சேர்ந்த பெருமாள் மகன் பால்பாண்டியன் (38) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 61 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த போதை பொருட்களை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியனை கைது செய்தனர்.