தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொதுமக்களை எரிச்சலுக்குள்ளாக்கிய பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றம்

காரைக்கால், ஜூலை 25: காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் தமிழகப் பகுதி மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதில் குறிப்பாக கும்பகோணம், திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தனியார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகள் நகரப் பகுதிகளான திருநள்ளார், திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி வழித்தடங்களில் செல்லும் போது அதிவேகமாக செல்வதோடு, தடை செய்யப்பட் ஏர் ஹாரன்களை பொருத்தி அதிக அளவு ஒலி எழுப்புகின்றன. அதிக ஒலி காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் தொந்தரவு செய்வதாக தொடர் புகார்கள் வந்தன.

நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்தில் அதிவேகமாக இயக்கி தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் அடித்துக் கொண்டு செல்வதாக போக்குவரத்து ஆய்வாளர் லெனின் பாரதிக்கு பொதுமக்கள் செல்போன் மூலமாக புகார் வந்தது.

உடனடியாக பேருந்து நிலையத்தில் ஆய்வாளர் லெனின் பாரதி, தமிழக பேருந்துகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தனியார் பேருந்துகள் என 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டார். அதில் சில பேருந்துகளில் தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் வைக்கப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்பட்டு பேருந்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வாளர் லெனின் பாரதி ஓட்டுனர்களை கடுமையாக எச்சரித்தார்.