தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புயல் எச்சரிக்கை அறிவிப்பால் கோடியக்கரை பகுதி மீனவர்கள் படகுகளை பாதுகாக்கும் பணி தீவிரம்

வேதாரண்யம், நவ.28: நாகை மாவட்டம் கோடியக்கரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் படகுகளை கடற்கரையிலிருந்து அரைகிமீட்டர் தூரத்திற்கு டிராக்டர் வைத்து தள்ளிச்சென்று பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாக உள்ள நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதைஅடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் உள்ள வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடந்த இரண்டு தினங்களாக கடலுக்கு செல்லவில்லை.

Advertisement

இந்நிலையில் நாளை முதல் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே தங்கிளன் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பால் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள் கடல் சீற்றத்தால் படகுகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக டிராக்டரை கொண்டு கடற்கரையில் இருந்து வெகு தொலைவிற்கு (சுமார் அரைகிலோமீட்டர் தூரம்) கொண்டு சென்று பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று மீன்பிடி வலைகள், படகு என்ஜின்களையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடியக்கரையில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement