தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட 3.38 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

நாகப்பட்டினம், நவ.27:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட 3 லட்சத்து 38 ஆயிரம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் பரிசு வழங்கினார்.

Advertisement

அப்போது கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் -2026ம் ஆண்டை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு கணக்கெடுப்பு படிவத்தனை நிரப்பி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும்பெற்று அவர்களது செயலியில் பதிவேற்றம் செய்து அதை சரிபார்த்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கணக்கெடுப்பு படிவம் வழங்குவது மீண்டும் பெறுவது தொடர்பாக அனைத்து வட்டத்திலும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி மற்றும் நிரப்பப்பட்ட படிவத்தை மீண்டும் பெறும் பணிகள் கண்காணிப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 104 கணக்கெடுப்பு படிவங்களும், கீழ்வேளுர் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 971 கணக்கெடுப்பு படிவங்களும், வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 124 கணக்கெடுப்பு படிவங்களும் என மொத்தம் 5 லட்சத்து 47 ஆயிரத்து 199 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 லட்ச்து 38 ஆயிரத்து 85 கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆகாஷ் கூறினார்.

Advertisement

Related News