தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழி நகரில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம்: உடனடியாக அகற்ற கோரிக்கை

சீர்காழி, அக். 26: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் தீபாவளி பண்டிகைக்கு வெடி வெடித்த குப்பைகள் பாலித்தீன் பைகள் , அட்டை பெட்டிகள் கழிவு பொருட்கள் பெரும்பாலான இடங்களில் அகற்றப்படாமல் கடந்த சில நாட்களாக தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.

Advertisement

மேலும் குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். குப்பைகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குப்பைகளை உடனுக்குடன் அகற்றவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள், கவுன்சிலர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து தேங்கிய குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News