தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

மயிலாடுதுறை, டிச.12: மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் காந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 ஐ முன்னிட்டு, 160.சீர்காழி, 161.மயிலாடுதுறை, 162.பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டுள்ள 1,267 எண்ணிக்கை கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2,139 எண்ணிக்கை வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,349 எண்ணிக்கை வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களும் என மொத்தம் 4,755 எண்ணிக்கையிலான மின்னணு இயந்திரங்கள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் காந்த், பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா , தனி வட்டாட்சியர் (தேர்தல்)முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News