நாகையில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
நாகப்பட்டினம், ஆக. 12: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது.வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறையுடைய 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.3 ஆயிரத்து 500 மதிப்பில் காதொலிக் கருவி, கை, கால் பாதிக்கப்பட்ட 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.8 ஆயிரத்து 900 மதிப்பில் சக்கர நாற்காலி என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரத்த 400 மதிப்பில் நலத்திட்ட உதவிகளைகலெக்டர் ஆகாஷ் வழங்கினார். டி ஆர் பவணந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.