தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்டல அளவிலான போட்டிகளில் பரிசு வென்ற மாணவிகள் நாகை கலெக்டரிடம் வாழ்த்து

நாகப்பட்டினம், டிச.11: நாகை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மண்டல அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றமைக்காக வழங்கப்பட்ட கோப்பைகள் மற்றும் பதக்கங்களை கலெக்டர் ஆகாஷிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்.

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மண்டல அளவிலான போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கடந்த 5ம் தேதி மற்றும் 6ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. இதில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் இல்ல குழந்தைகள் கைப்பந்து போட்டியில் முதல் இடமும், நடனப் போட்டியில் மூன்றாம் இடமும், பாட்டு போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித டான்போஸ்கோ இல்ல குழந்தைகள் பாட்டு போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்றமைக்காக பெற்ற வெற்றி கோப்பைகள் மற்றும் பதக்கங்களை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆகாஷிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர்.

அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement