தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், டிச.11: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியக்குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனே துவங்க வலியுறுத்தியும், வீட்டு மனைபட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டியும், கனமழையால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து ஊராட்சிகளிலும் உடனே 100 நாள் வேலையை துவங்கிட வேண்டும் என வலியுறுத்தியும், கோவில்இடம் புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனை, பட்டா வீடு வழங்க வலியுறுத்தியும், அனைத்து ஊராட்சிகளிலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கிடவும், மகளிர் உரிமைத் தொகை விடுபடாமல் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஒன்றிய தலைவர் லதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement