மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Advertisement
மயிலாடுதுறை, செப். 15: மயிலாடுதுறை திருவிழந்தூர் தீபாய்ந்த அம்மன் கோவில் அருகில் காவிரி ஆற்றின் கரையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைத்து வைத்துக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 1 கிலோ 100 கிராம் அளவில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்டவர் மயிலாடுதுறை திருவிழந்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விமானவேலு மகன் வீரமணி(வயது 28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், கைது செய்யப்பட்ட வீரமணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement