தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் 7 சவரன், ₹50 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, ஜூலை 12: வந்தவாசி அருகே சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் 7 சவரன் நகை, ₹50 ஆயிரம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாண்டைராஜன் மகன் தரணி(26), சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது வீட்டில் இருந்தவாறு கனிணி மூலம் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை பராமரித்து விவசாய பணி செய்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் தனது தந்தை அப்பாண்டைராஜன், தாய் சாந்தி ஆகியோருடன் சாந்தியின் தங்கை மகள் திருமணத்திற்கு சென்னைக்கு சென்றுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், நேற்று இவர்களது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து அருகில் வசிப்பவர்கள் செல்போன் மூலம் தரணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தரணி குடும்பத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, அறையில் உள்ள பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள், வெள்ளி குத்து விளக்குகள், 4 பட்டுப்புடவைகள், நெல் பயிர் அறுவடை செய்ய கூலி தொகை கொடுக்க வங்கியில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்து இருந்த ₹50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தெள்ளார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியா மற்றும் போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். திருமணத்திற்கு சென்றதை அறிந்து திருட்டு நடந்துள்ளதால் இதில் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News