தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

 

குடியாத்தம், செப்.10: குடியாத்தத்தில் முன்னாள் ராணுவவீரர் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவவீரர் முருகன். இவர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் பஸ் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர், நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணியளவில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பின்புற கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. மேலும், அதில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ₹10 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் திட்டமிட்டு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related News