தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாரம்பரிய கட்டிடத்தில் அருங்காட்சியகம்

 

Advertisement

கோவை, ஜூன் 25: கோவை திருச்சி ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே வனத்துறை கட்டிடம் உள்ளது. 120 ஆண்டிற்கு முன் கட்டிய இந்த கட்டடம் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கவர்னர் பங்களா இருந்தது. ஆர்தர் லாலி உள்ளிட்டோர் இங்கு பணியாற்றி வந்துள்ளதாக தெரிகிறது. பின்னர், கவர்னர் பங்களா இடம் மாற்றம் செய்யப்பட்டது. வன அலுவலகமாக இந்த கட்டடம் மாறியது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்திற்கு முன்னர் இந்த கட்டிடம் தனியார் வசம் இருந்தது.

சூலூர் சுப்பாராவ் என்ற மிராசுதாரர் தேக்கு மரத்தில் கோட்டை தோற்றத்தில் ஓய்வு கால பங்களா கட்டினார். இவர் சூலூரில் இருந்து குதிரை வண்டியில் வந்து இந்த பங்களாவில் தங்கி ஓய்வு எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவர் காலத்திற்கு பின் இந்த பங்களாவை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த கட்டடத்தில் மண், கருங்கல்லுக்கு இணையாக தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. தேக்கு மரத்தூண்களை, தாங்கு தூண்களாக அமைத்துள்ளனர். 15 ஆண்டிற்கு முன் மாவட்ட வன அலுவலர் ஆர்.எஸ்.புரத்திற்கு இடம் மாற்றப்பட்டது.

அதற்கு பிறகு பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து சரிந்து விட்டது. கட்டிடத்தை சிலர் இரவு நேரத்தில் மது குடிக்கவும், விபச்சாரத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். கோவையின் பிரதான அடையாளமாக இருக்கும் இந்த கட்டிடத்தை பொதுப்பணித்துறையின் பாரம்பரிய பிரிவு (ஹெரி டேஜ்) மூலமாக 10.20 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது.

கட்டிடத்தை பழைய தோற்றத்தில் அப்படிேய புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதுவரை 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. இன்னும் சில மாதத்தில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அரிய பொருட்களை பாதுகாக்கும் இடமாகவும் காட்சி கூடமாகவும் (மியூசியம்) அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement