தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முருங்கப்பாக்கம் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

புதுச்சேரி, ஏப். 17: புதுச்சேரி முருங்கப்பாக்கம் அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியில் திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கோயில் பூசாரி வழக்கம்போல் கோயிலை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே கோயில் நிர்வாகத்தினர் இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோயிலில் அமைக்கபட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 4 மணியளவில் கோயிலுக்குள் மர்ம நபர் புகுந்து உண்டியலை உடைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் உண்டியலில் இருந்த பணத்தை மட்டும் மூட்டையில் வைத்து கட்டி கொண்டு, சில்லறை காசுகளை எடுக்காமல், மீண்டும் உண்டியலில் போட்டு மூடி வைத்து விட்டு செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News