தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர், ஜூலை3: தொழில் நகரமான திருப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.அங்கு கழிவு நீரில் உள்ள பெரிய துகள்கள், குப்பைகள் மற்றும் திடப்பொருட்கள்,கரிம பொருட்கள், நச்சுத்தன்மை உள்ளிட்டவை நீக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அவை வெளியேற்றப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

இந்த பணிகளுக்காக திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் மற்றும் ஆண்டிபாளையம் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 மற்றும் 32 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் அமித் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மொத்த கழிவுநீர் மற்றும் அவை சுத்தகரிப்பு செய்யப்படும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிகழ்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஹரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து ஆண்டிப்பாளையம் பகுதியில் 20 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டு அங்கு மரக்கன்று நட்டு வைத்தார்.

Related News