தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிவகிரி பகுதியில் கோவேறு கழுதை பால் அமோக விற்பனை

 

மொடக்குறிச்சி, ஜூலை 1: சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோவேறு கழுதை பால் விற்பனை நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதிகளில் அவ்வப்போது நாட்டு கழுதை பால் நடந்துள்ளது. தற்போது திருச்சியை சேர்ந்த சில வாலிபர்கள் 10 கோவேறு கழுதைகளை குட்டிகளுடன் இந்த பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். காலை, மாலை நேரங்களில் தெருத்தெருவாக கழுதைகளை ஓட்டிவந்து, பால் கறந்து விற்பனை செய்கின்றனர். 100 மில்லி அளவு கோவேறு கழுதை பால் 800 ரூபாய்கு விற்கின்றனர்.

இது குறித்து கழுதை பால் விற்பனை செய்பவர்கள் கூறியதாவது: கோவேறு கழுதைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை. வட மாநிலங்களில் இருந்து வாங்கி வருகிறோம். இதற்கென தனியாக புரோக்கர்கள் உள்ளனர். நல்ல ஜாதி கழுதையை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை, விலை கொடுத்து வாங்குகிறோம்.

ஒரு கழுதையில் நாளொன்றுக்கு, 250 மில்லி அளவு மட்டுமே பால் கறக்க முடியும். நாட்டுக் கழுதைப் பாலைவிட, கோவேறு கழுதை பால் கூடுதலான மருத்துவ குணங்களை உடையது. குழந்தைகளுக்கு இரண்டு வேளை கழுதைப்பால் கொடுப்பதால், மப்பு, மாந்தம், இளைப்பு, காமாலை முதலியவை வராது. கோவேறு கழுதைகளை கவனத்துடன் பராமரிக்க வேண்டும். புல், புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை தீவனமாக தருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.