தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாட்டில் உள்ள மகன் பெயரில் லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய் புகார் மதுரையில் போலி நிறுவனம் நடத்தி

வேலூர், ஜூலை 8: மதுரையில் போலி நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் உள்ள மகன் பெயரில் லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக, நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய் புகார் மனு அளித்தார்.

Advertisement

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று டிஆர்ஓ மாலதி தலைமையில் நடந்தது. இதில் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மெக்ரூன் என்ற பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் எங்கள் வீட்டிற்கு ஒரு சம்மன் வந்தது. அதில் எனது மகன் பெயரில் மதுரையில் தொழில் நடப்பதாகவும், அது நவம்பர் மாதம் 2024ம் ஆண்டில் இருந்து செயல்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது எனது மகன் பெயரில் மதுரை மாவட்டம், அழகர் கோயில் மெயின் ரோடு கே.புதூர் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வந்ததும், அந்த நிறுவனத்திற்கு எனது மகன் பெயரில் ஜிஎஸ்டி எண் சென்னை மண்டலத்தில், மதுரை 2வது டிவிஷனில் பெறப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

மகன் பெயரில் போலியாக நிறுவனம் நடத்தி, பல லட்சங்கள் பரிவர்த்தனை செய்துள்ளனர். அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையாக புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதில் தொழில் ஆரம்பித்ததாக குறிப்பிட்டுள்ள 2022ம் ஆண்டு காலக்கட்டத்தில், எனது மகன் மனநல பிரச்னைக்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கான ஆவணங்களும் எங்களிடத்தில் உள்ளது. எனவே எனது மகன் பெயரில் நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News