தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேவாரம் மலையடிவாரத்தில் மொச்சை சாகுபடி தொடர்ந்து ‘டல்’

 

தேவாரம், ஜூலை 8: தேவாரம் மலையடிவார பகுதியில் மொச்சைக்காய் சாகுபடி குறைந்து வருகிறது.தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் மொச்சைக்காய் பயிரிடப்படுவது வழக்கம். இதற்கு தோட்டங்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். மலையடிவாரத்தில் மழை பெய்யும் போது, தண்ணீரும் கிடைக்கும் போது கூடுதல் விளைச்சல் கிடைக்கும். விவசாயிகள் இதனை நம்பி மலையடிவாரங்களில், மொச்சைக் காய் நடவு செய்வார்கள். ஆனால் தற்போது மொச்சைக்காய் சாகுபடி மலையடிவாரத்தில் குறைந்து வருகிறது. அதே வேளையில் தோட்டங்களில் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. ஆடி மாதம் தொடங்கிடும் போது, மொச்சைக்காய் விதைப்பது வழக்கம்.

காரணம் பருவம் தவறிய மழை, தற்போது அதிகரித்து வரும் சாரல் காரணமாக விவசாய தோட்டங்களில் மாற்று விவசாயமாக, மொச்சை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பில் மொச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கைகொடுக்கக் கூடியதாக இருந்தாலும் மலையடிவாரத்தில் விளையும் மொச்சையை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இப்போதோ, சாரல் காரணமாக மொச்சைக்காய் அதிகம் பூக்கள் வைக்கிறது. இதில் மழையினால் பூச்சிகளும் அதிகரிப்பதால், தடுப்பு மருந்துகளை அடித்து வருகின்றனர்.

Related News