தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

படகு சவாரி நிலவரம் அறிய செல்போன் எண் அறிவிப்பு குருசடை தீவுக்கு

ராமேஸ்வரம், ஜூன் 11: குருசடை தீவுக்கு படகு சவாரி நிலவரம் குறித்து அறிந்து கொள்ள சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையை தொடர்பு கொள்ள வரவேற்பு செல்போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை தீவை சுற்றி பார்க்க பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபம் அருகே வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும் இந்த படகு சவாரி கடலின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே கடல் பயணம் அமையும் என வனத்துறை சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் கடல் சீற்றம் நேரங்களில் படகு சவாரி பயணம் செய்ய வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சிரமத்தை தவிர்க்க சுற்றுலா பயணிகள் முன்னதாக குருசடை தீவு படகு சவாரி அலுவலக வரவேற்பு செல்போன் நம்பர் 919092526089 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டு படகு சவாரி பயணம் குறித்த நிலையை அறிந்து கொள்ளும்படி வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Related News