தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நான் எம்எல்ஏவாக தொடர்வது அமைச்சர் கையில்தான் இருக்கிறது: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘கடந்த வாரம் பெய்த மழையால் வரதராஜபுரம் பகுதியில் முல்லை நகர், தனலட்சுமி நகர், பிடிசி நகர், அஷ்டலட்சுமி நகர் போன்ற இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது. நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுபவம் வாய்ந்தவர், எதையெடுத்தாலும் முழுமையாக செய்யக்கூடியவர். அரைகுறையாக செய்யாதவர். அதை நாடு அறியும்.
Advertisement

ஆனால், அந்தப் பகுதியில் என்னுடைய தொகுதியான வரதராஜபுரம் பகுதியில் அரைகுறையாக வேலை நடந்திருக்கிறது. முழுமையாக வேலை நடைபெறவில்லை. ஆனால், முன்பு ஒரு காலத்தில் எல்லாம் மழை, வெள்ளம் வந்தால் பத்து நாட்கள், இருபது நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும். உங்களுடைய முயற்சியால் இப்போது ஒரு நாளில் வடிந்து விடுகிறது. இருந்தபோதிலும் நான் குறிப்பிட்ட அந்த பகுதிகளில் திருப்புகழ் கமிட்டியுடைய பரிந்துரை இருக்கிறது.

அவரின் பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றினால் தான் அங்கே தண்ணீர் இல்லாத பகுதியாக அந்த பகுதியைப் பார்க்க முடியும். ஆகவே, திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை அமைச்சர், முதல்வரின் வழிகாட்டுதலோடு நிறைவேற்றுவார் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். எல்லா இடத்திலும் இருப்பதுபோல நெருக்கடி எனக்கும் என்னுடைய தொகுதியில் இருக்கிறது. ஒரு உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். வருகின்ற நிதிநிலை அறிக்கையில் எங்களுடைய நீர்வளத் துறை அமைச்சர் திருப்புகழ் கமிட்டியை நிறைவேற்றவில்லையென்று சொன்னால், நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது அவர் கையில்தான் இருக்கிறது.

நீர்வளத் துறை அமைச்சர் இதை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘உறுப்பினர் நன்றாக என்னிடம் மாட்டிக்கொண்டார். அவர் அடுத்தமுறை சட்டமன்ற உறுப்பினராக வருவது என் கையில்தான் இருக்கிறது. திருப்புகழ் கமிட்டி மட்டுமல்ல. திருவாசகம் கமிட்டி கொடுத்தாலும் சரி. நீங்கள் கூறியது எனக்கு தெரியும். அதற்காக முந்தைய நாள்கூட அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம். குறை தீர்க்கப்படும்,” என்றார்.

Advertisement