தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்: அமைச்சரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, ஜூன் 23: முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி வேண்டி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

Advertisement

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மொத்தம் நூறுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் பயில்கின்ற மாணவ, மாணவியர்கள் உயர் கல்விக்கு செல்ல வேண்டுமென்றால் கோவை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி முத்துப்பேட்டை பகுதியில் தனியாக அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து திமுக தேர்தல் வாக்குறுதியில் கல்லூரி அமைக்கப்படும் என கூறப்பட்டது மேலும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தொடர்ச்சியாக சட்டமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்து பேசி வந்தார்.

இந்தநிலையில் கடந்த மார்ச் 14ந்தேதி நடந்த தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்துப்பேட்டையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் முத்துப்பேட்டை மக்கள் நீண்டநாள் கனவு நிறைவேறியதை கண்டு மகிழ்ச்சியடைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்தநிலையில் நிரந்தமாக கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யும் வரை கல்லூரியை இந்த (2025-26) கல்வி ஆண்டு முதல் செயல்பட ஆணை பிறப்பிக்கபட்டு சேர்க்கை விண்ணப்பங்கள் முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து நேற்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியனை நேரில் சந்தித்து முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி வேண்டி வலியுருத்தினார். அதற்கு அமைச்சர் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement

Related News