தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி அடுத்த பையூரில் மாயமான டீக்கடைக்காரர் ஆற்றில் சடலமாக மீட்பு

ஆரணி, மார்ச் 12: ஆரணி அடுத்த பையூரில் காணாமல் போன டீக்கடைக்காரர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(58), டீக்கடை உரிமையாளர் இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூர்த்தி கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisement

இதுகுறித்து குடும்பத்தினர் ஆரணி தாலுகா போலீசில் மறுநாள் (8ம்தேதி) புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மூர்த்தியை தேடி வந்தனர்.

பையூர் கமண்டல நாகநதி ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார், சடலத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த 7ம்தேதி காணாமல் போன டீக்கடைக்காரர் மூர்த்தி என தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் வினோத்குமார்(28) கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மூர்த்தி எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.

Advertisement