தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காதல் திருமணமான 7 மாதத்தில் மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை; போலீசார் விசாரணை

சேத்துப்பட்டு: போளூரில் காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ(21), கூலித்தொழிலாளி. இவர் போளூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரது பெற்றோர் வீட்டிலும் ஏற்காததால், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், விக்கி எந்த வேலைக்கும் செல்லவில்லையாம். பலமுறை மனைவி வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியும் கேட்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மைனர் பெண் கடந்த 30ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பெண்ணின் தந்தை போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த மைனர் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.