தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றங்கரையில் எச்சரிக்கை பலகை வைப்பு

 

Advertisement

மேட்டுப்பாளையம், மே 3: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோவையின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளை நாடிச்செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பொதுமக்கள் அங்குள்ள ஆற்றின் ஆழம், சேறு, சகதி உள்ளிட்டவை குறித்து எவ்வித விவரமும் அறியாமல் ஆற்றில் குளித்து தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

அண்மையில் பொள்ளாச்சி ஆழியார் அணைப்பகுதியில் கோவை சட்டக்கல்லூரி மாணவரும், கோவை பேரூர் அருகே அணைக்கட்டில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் மூவரும் பரிதாபமாக பலியாகினர். நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கோவை மாவட்ட கலெக்டர் நீர்நிலைகளை ஒட்டி எச்சரிக்கை பலகைகளை அமைக்கவும், வலைகளை அமைக்கவும் உத்தரவிட்டார். அந்த வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் நகராட்சியின் சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பதாகைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஆற்றில் இறங்கக்கூடாது.  மீறினால் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள் என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் மற்றும் லைப் கார்ட்ஸ் குழுவினர் 24 மணி நேரமும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மீறி பவானி ஆற்றில் இறங்கும் மக்களை எச்சரித்து அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement