தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் மாநாகராட்சி பகுதி ராணி மங்கம்மாள் சாலையில் மெகா பள்ளம்

 

Advertisement

கரூர், ஜூன் 10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கரூரில் இருந்து வாங்கல், நெரூர், புலியூர், பசுபதிபாளையம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கரூர் அண்ணாவளைவு அடுத்துள்ள ராணி மங்கம்மாள் சாலை வழியாக செல்கிறது. இதே போல், இந்த பகுதியில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையின் வழியாக சென்று வருகிறது.

சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் ராணி மங்கம்மாள் சாலையின் மையத்தில் திடீரென 6 அடி ஆழத்திற்கு மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால், இந்த சாலையின் வழியாக சென்ற அனைத்து வாகன ஓட்டிகளும் செய்வதறியாது நின்றனர். இதனால், இந்த சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், மெகா பள்ளம் ஏற்பட்ட சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து, போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தினர்.

இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் சென்றன. இந்த மெகா பள்ளம் காரணமாக இந்த சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேரிகார்டு வைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பரபரப்பாக வாகன போக்குவரத்து நடைபெற்ற இந்த 5 ரோடு சாலை கடந்த இரண்டு நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement

Related News