தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தாக்குதலை கண்டித்து மருத்துவ மாணவர்கள் திடீர் போராட்டம்

மதுரை, மார்ச் 27: சிவகங்கையில் டாக்டர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, மதுரையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும், பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை வசதியுடன் உரிய பாதுகாப்பு செய்து தரக்கோரியும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு குடியிருப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் டாக்டர் கீர்த்தி வர்மன் கூறும்போது, ‘‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள், பாதுகாவலர்கள், இரவு ரோந்து உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, 2008ம் ஆண்டு முன்மொழியப்பட்ட மருத்துவர்களுக்கான தனிச்சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.