தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்

 

Advertisement

வேலாயுதம்பாளையம், செப்.14: கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் அருகே குறுக்கு சாலை பகுதியில் ஓலப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடந்தது. கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் அருகே குறுக்கு சாலை பகுதியில் ஓலப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சலை கண்டறியும் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்த அளவு குறித்த பரிசோதனை, உடல் பரிசோதனை செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனைகள் செய்தனர். அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், சளி மற்றும் காய்ச்சல் வராமல் இருப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்கள் அதிகளவு கீரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பழ வகைகள், காய்கறி வகைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Advertisement

Related News