தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேகத்தடையில் ரிப்ளக்டர் பொருத்த நடவடிக்கை

 

திருச்செங்கோடு, ஜூன் 27: எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன்புறம் சாலையில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் சரக்கு வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளியின் முன்பு வேகத்தடை அமைத்தனர். இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள, இரவில் ஒளிரும் ரிப்ளக்டர்கள் அமைக்கப்பட்டது. அதிகப்படியான வாகனங்கள், தொடர்ந்து செல்வதால், ரிப்ளக்டர் விளக்குகள் நொறுங்கி சேதமாகி விட்டது.

இதனால் இருசக்கர வாகனத்தில் வருவோருக்கு, சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல், சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, வேகத்தடையில் புதிதாக ரிக்ளக்டர்களை பொருத்த வேண்டும் என திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை வருவாய் ஆய்வாளர் கந்தசாமியிடம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், தங்கராஜ் ஆகியோர் மனு வழங்கினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

Related News